News May 1, 2024

உடல்கள் அடையாம் காணப்பட்டது

image

காரியாபட்டி, ஆவியூர் கல்குவாரியில் இன்று இறக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதில் வெடிபொருள் கொண்டு வரப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர் கந்தசாமி, துரை, குருசாமி, என்ற 3 பேர் உயிரிழந்தனர். அதில் இருவர் ராஜபாளையம் எனவும், மற்றொருவர் மதுரை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. வெடிபொருட்கள் முழுமையாக வெடிக்காமல் சிதறி கிடப்பதால் மீண்டும் வெடிக்கக்கூடும் என்பதால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Similar News

News March 11, 2026

BREAKING சிவாகாசி: பட்டாசு ஆலைக்குள் வெடி விபத்து

image

வெம்பக்கோட்டை அருகே வெற்றிலையூரணியில் விஜயகுமாருக்கு சொந்தமான ரோஸ் பட்டாசு ஆலை வளாகத்தில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பிலிருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், தொழிலாளர்கள் இன்றி பூட்டிக் கிடந்த குடியிருப்பில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் மின் வயர் அறுந்து விழுந்ததால் பட்டாசுகள் வெடித்து சிதறி குடியிருப்பு சேதமடைந்தது தெரியவந்தது.

News March 11, 2026

விருதுநகர்: Spam Calls தொல்லையா? இனி END CARD!

image

விருதுநகர் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, START 0 என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க

News March 11, 2026

காரியாபட்டி: மூதாட்டி கொலையில் தாய், மகள் கைது

image

திருச்சுழி – காரியாபட்டி சாலையில் புலிக்குறிச்சி காட்டுப் பகுதியில் நேற்று பண்ணை மூன்றடைப்பை சேர்ந்த மூதாட்டி அம்பிகா என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்த விசாரனையில் தோப்பூரை சேர்ந்த லோகாம்பாள்(39), அவரது 17 வயது மகள் ஆகியோர் சுபநிகழ்ச்சிக்காக அழைத்துச் செல்வதாக கூறி மூதாடியை பைக்கில் அழைத்துச் சென்று மூதாட்டியை கொலை செய்து நகையை பறித்து சென்ற நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!