News December 25, 2025
நாமக்கல்லில் அனைவருக்கும் ரூ.30,000 இலவசம்?

2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் தொகையைப் பெறுங்கள் முடியாது என வாட்ஸ் ஆப்பில் பொய்யான தகவல் பரவி வருவதாக நாமக்கல் போலீசார் தெரிவித்துள்ளனர்: மேலும் இந்த லிங்கை கிளிக் செய்தால் உடனே உங்களது வாட்ஸ் அப் ஹேக் செய்யப்படும் என எச்சரிக்கை!SHAREit
Similar News
News December 27, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (டிச.27) இரவு ரோந்து பணிக்கு 4 சக்கர வாகன காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தேவைக்கு அந்தந்த உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், வேலூர் ஆகிய முக்கிய நகரங்களில் ரோந்து பணியில் இருப்பார்கள். தேவைப்படுவோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.
News December 27, 2025
நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இன்று டிச.27 இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
News December 27, 2025
நாமக்கல்: நீங்க கேன் தண்ணீர் குடிக்கிறிங்களா?

நாமக்கல் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)


