News December 25, 2025

நாமக்கல் ஆட்சியர் வேண்டுக்கோள்!

image

நாமக்கல் மாவட்டத்தில் பிஎம்கிசான் பயனாளிகளுக்கு 22வது தவணைத் தொகை விடுவிக்கப்படவுள்ளது. 21வது தவணை வரை பெற்ற 9372 பேர் இதுவரை தனித்துவ விவசாய அடையாள எண்ணை பெறவில்லை. எனவே, அந்த விவசாயிகள் அனைவரும் வட்டார வேளாண்மை/தோட்டக்கலை அலுவலகம் (அ) பொது சேவை மையத்தில் ஆதார் எண், பட்டா, தொலைபேசி எண்ணை கொடுத்து டிச.28க்குள் தனித்துவ விவசாய அடையாள எண்ணை பெற்று கொள்ளுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 27, 2025

நாமக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News December 27, 2025

குமாரபாளையம்: வெந்நீரால் போன கணவர் உயிர்!

image

குமாரபாளையத்தை சேர்ந்த தம்பதி உதயகுமார் (40), பிரியா (39). தம்பதியருக்கு சுமித்ரா, பவித்ரா என, இரு மகள்கள் உள்ளனர். கடந்த, 23, இரவு, கணவர் உதய குமார் குளிப்பதற்காக பிரியா வெந்நீர் வைத்து எடுத்து வந்துள்ளார். அப்போது கை தவறி, அங்கு உட்கார்ந்திருந்த உதயகுமார் மீது வெந்நீர் கொட்டியதில் படுகாயமடைந்து. நேற்று முன்தினம் இரவு, 11:15 மணிக்கு இறந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 27, 2025

வெண்ணந்துார் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி

image

வெண்ணந்துார் அடுத்த ஆயிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி, 65; இவர், நேற்று இரவு, சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, அத்தனுார் பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து NHயை கடக்க முயன்றார். அப்போது, நாமக்கல் பகுதியில் இருந்து சேலம் நோக்கி அதிவேகத்தில் சென்ற அடையாளம் தெரியாத கார், இவர் மீது மோதியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே மணி இறந்தார். இதுகுறித்து, வெண்ணந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!