News December 25, 2025
தேனியில் புகையிலை விற்ற பெண் கைது

கோம்பை காவல் நிலைய போலீசார் குற்றச் தடுப்பு சம்பந்தமாக நேற்று (டிச.24) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த தேன்மொழி என்பவர் அவரது பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. கடையில் இருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் தேன்மொழி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Similar News
News December 26, 2025
தேனி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT
News December 26, 2025
தேனி: கார் மோதியதில் தந்தை, மகன், மகள் படுகாயம்!

சில்வார்பட்டியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் நேற்று (டிச.25) அவரது 11 வயது மகன் மற்றும் 4 வயது மகளுடன் திண்டுக்கல்-தேனி பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கிருஷ்ணா என்பவர் ஓட்டி வந்த கார் இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் காயமடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
News December 26, 2025
தேர்வுக்கு அசல் அடையாள அட்டை கட்டாயம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள 2708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நாளை (டிச.27ல்) நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 508 தேர்வர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்விற்கு வருபவர்கள் ஆதார், பான்கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் ஆகிய சான்றுகளின் ஏதாவது ஒன்றின் அசல் வைத்திருப்பது கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது


