News December 25, 2025

தருமபுரியில் லஞ்சமா? இதை பண்ணுங்க!

image

தருமபுரி மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இதனை தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம், (04342-260042) இந்த எண்ணை தொடர்ப்பு கொண்டு புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News January 13, 2026

தருமபுரி: நடத்துனர் மீது கொலைவெறி தாக்குதல்!

image

நல்லகுட்லஅள்ளியை சேர்ந்த பஸ் கண்டக்டர் அகிலரசன் (30). இவர் நேற்று முன்தினம் பஸ்சில் பயணித்த வினோத்குமாரிடம் (35) டிக்கெட் எடுக்கும்படி கூறினார். அதற்கு வினோத்குமார் “என்னிடமே டிக்கெட் கேட்கிறாயா?” என தகராறில் ஈடுபட்டார். பின் வினோத் பஸ் நிற்கும் போது கீழே கிடந்த கட்டையால் அகிலரசனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வினோத்குமாரை கைது செய்தனர்.

News January 13, 2026

தருமபுரி: மாமனாரை கொன்ற மருமகன்!

image

தருமபுரி, எரங்காட்டு கொட்டாயை சேர்ந்தவர் ஆறுமுகம் (47) மருந்துக்கடை ஊழியராக உள்ளார். இவருக்கு ஜோதி என்கிற மனைவியும் 2 மகன்கள் & 2 மகள்கள் உள்ளனர். ஜன.7ம் தேதி மதிகோன்பாளைய ஏரியில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தருமபுரி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஜோதிக்கும் அவரது மருமகனான சீதாராமனும் திருமணம் மீறிய உறவில் இருந்தது தெரியவந்தது. இதனை ஆறுமுகம் கண்டித்ததால், ஆறுமுகத்தை கொலை செய்தது தெரியவந்தது.

News January 12, 2026

தருமபுரி: ரூ.44,900 சம்பளத்தில் அரசு வேலை – உடனே முந்துங்கள்!

image

தருமபுரி மக்களே, இந்திய ரயில்வே துறையில் 8 பிரிவுகளின் கீழ் 312 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு மாத சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.44,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.29-க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!