News December 25, 2025
நெல்லை மாவட்ட கிறிஸ்தவர்கள் கவனத்திற்கு!

ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட தமிழ்நாட்டு கிறிஸ்தவர்கள் அரசு மானியம் பெற பிப்ரவரி 28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 01.11.2025-க்கு பிறகு பயணித்த 550 பேருக்கு தலா ரூ.37,000, 50 கன்னியாஸ்திரிகள்/அருட்சகோதரிகளுக்கு தலா ரூ.60,000 மானியம் ECS முறையில் வழங்கப்படும். விண்ணப்பப் படிவம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் – சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலோ அல்லது www.bcmbcmw.tn.gov.in இணையதளத்தில் பெறலாம்.
Similar News
News December 29, 2025
நெல்லை: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

நெல்லை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News December 29, 2025
நெல்லை: தொழிலாளி கொலையில் 3 சிறுவர்கள் கைது!

நெல்லை மாவட்டம் வி கே புரம் அருகே காக்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த மைக் செட் உரிமையாளர் மாரியப்பன் (47). இவர் நேற்று முன்தினம் இரவு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அதே ஊரைச் சேர்ந்த அருண்பாண்டி (19) மற்றும் 3 இளம் சிறார்களை விக்கிரமசிங்கபுரம் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். ஏற்கனவே இருந்த தகராறில் முன்விராதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
News December 29, 2025
நெல்லையில் இங்கெல்லாம் மின் தடை!

பாளை, சமாதானபுரம், மேலக்கல்லூர், மூலக்கரைப்பட்டி, கங்கைகொண்டான், மானூர், வன்னிகோனேந்தல், மூன்றடைப்பு ஆகிய துணை மின் நிலையத்தில் இன்று (டிச 29) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. வி எம் சத்திரம், கிருஷ்ணாபுரம், சீவலப்பேரி, குப்ப குறிச்சி, புதுக்குறிச்சி, சங்கன் திரடு, மாவடி, தெற்குப்பட்டி, கண்ணாடி குளம், பானாங்குளம், களக்குடி அதன் சுற்றுப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை.


