News December 25, 2025
விருதுநகர்: பள்ளிக்குள் பெண் ஆசிரியரை தாக்கிய EX மாணவர்

விருதுநகர் rr நகரை சேர்ந்தவர் அன்புச்செல்வி, 36. ஆவுடையாபுரம் அரசு பள்ளியில் இயற்பியல் ஆசிரியர். இவர் தன் வகுப்பறையில் இருந்த மாணவர்களுக்கு, சில நாட்களுக்கு முன், ‘கடந்தாண்டு 11th படிப்பை பாதியில் நிறுத்திய மாணவனை போல இருக்கக் கூடாது’ என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதை அறிந்த அந்த முன்னாள் மாணவர், நேற்று வகுப்பறைக்குள் நுழைந்து, ஆசிரியையிடம் ஆபாசமாக பேசி, அவரை கடுமையாக தாக்கினார்.
Similar News
News February 6, 2026
BREAKING விருதுநகர் எம்.பி பதிவால் கூட்டணியில் மோதல்?

புதுச்சேரியில் கூட்டணிக்கு திமுக தான் தலைமை தாங்க வேண்டும் என்று ஜெகத்ரட்சகனிடம் திமுக நிர்வாகிகள் வலியுறுத்துவதாக தகவல் வெளியானது. இது காங்கிரஸ் கட்சியிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கூட்டணியில் 8% ஓட்டுகளை வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா? இல்லை 26% வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா? என விருதுநகர் MP மாணிக்கம் தாகூர் X தளத்தில் பதிவிட்டுள்ளது கூட்டணியில் மோதலை ஏற்படுத்தியுள்ளது.
News February 6, 2026
ஸ்ரீவி: தனியார் பள்ளியில் முகமூடி திருடர்கள் கைவரிசை

ஶ்ரீவி – சிவகாசி சாலையில் தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு கண்காணிப்பு கேமரா மற்றும் 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பார்த்த போது அலுவலகத்தில் இருந்த ரூ.70,000 திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்குள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்ததில் முகமூடி அணிந்த இருவர் திருடிச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அசிரியர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
News February 6, 2026
விருதுநகர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க


