News December 25, 2025
கள்ளக்குறிச்சி: அரசு வேலை ஆசை – ரூ.9 லட்சம் அபேஸ்!

உளுந்தூா்பேட்டையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் ஆறுமுகம், தனது மகனுக்கு அரசு வேலைக்கு முயற்சித்து வந்துள்ளார். இதையறிந்த அவருடன் பணியாற்றிய சிவசங்கர், தனக்கு தெரிந்த நபர் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.8.86 லட்சம் பணத்தை பெற்றுள்ளார். ஆனால் அவர் ஏமாற்றிய நிலையில், சிவசங்கர் மீது ஆறுமுகம் போலீசில் புகாரளித்தார். அதனடிப்படையில், சிவசங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 31, 2025
கள்ளக்குறிச்சி: 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் கடனுதவி!

கள்ளக்குறிச்சி மக்களே! படித்த, படிக்காத நபர்கள் பலரும் வேலை தேடி வருகின்ற நிலையில், அவர்களுக்காகவே தமிழ்நாடு அரசு UYEGP என்ற பொன்னான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் 8ம் வகுப்பு படித்தவர்கள் கூட தொழில் தொடங்கலாம். அதற்காக, 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்பும் 45 வயதிற்குட்பட்டவர்கள் <
News December 31, 2025
கள்ளக்குறிச்சியில் 250 நாட்டுக் கோழிகள் இலவசம்!

கள்ளக்குறிச்சி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News December 31, 2025
கள்ளக்குறிச்சி: INDIA POST-ல் 30,000 காலிப்பணியிடங்கள்!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும், அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <


