News December 25, 2025
தருமபுரியில் நாட்டு வெடிகுண்டு வைத்து பரபரப்பு!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள எலுமிச்சனஅள்ளி காப்புகாட்டில் முயல், காட்டுபன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாட அந்தேரிகாடு கிராமத்தை சேர்ந்த சேட்டு (45), மாது (45) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு நாட்டு வெடிகுண்டுகளை வைத்து விட்டு வந்துள்ளனர். இதனை அறிந்த வனத்துறையினர், வெடிகுண்டுகளை கைப்பற்றி இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், தருமபுரி சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 27, 2025
தருமபுரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News December 27, 2025
தருமபுரி: Whats’App இருக்கா? சூப்பர் தகவல்

தருமபுரி மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை புக் செய்யலாம். (SHARE)
News December 27, 2025
தருமபுரி: கார் மோதி விவசாயி பலி!

சோமன அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (45). விவசாயி. இவர் பிக்கம்பட்டி அருகே மோட்டார் சைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இது தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


