News December 25, 2025

புதுக்கோட்டை: தொடர் திருட்டு – இளைஞர் கைது

image

விராலிமலை சுற்றுப்பகுதிகளில் வீடு மற்றும் கடைகளுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை லாபகமாக திருடி வந்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சிவராஜ் (19) என்ற இளைஞரை விராலிமலை போலீசார் கைது செய்தனர். விராலிமலை பகுதியில் மோட்டார் திருட்டு அண்மை காலமாக தொடர் கதையாக இருந்து வந்த நிலையில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Similar News

News December 30, 2025

புதுகை: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே <>கிளிக் <<>>செய்யவும். இத்திட்டம் குறித்து அனைவருக்கும் Share செய்து தெரியப்படுத்துங்கள்.

News December 30, 2025

புதுகை: உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

image

புதுகை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டய படிப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை பெற நாளை கடைசி நாளாகும். முதுகலை பாலிடெக்னிக் போன்ற படிப்பு பயிலும் முன்றாண்டு இளங்கலை மாணவ மாணவியர்களுக்கு எவ்வித நிபந்தனை இன்றி கல்வியில் உதவி தொகை பெற www.://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News December 30, 2025

புதுகை: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்

image

புதுகை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம்.

error: Content is protected !!