News December 25, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை பதிவு வெளியிட்டுள்ளது. அதில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களது முகநூல் பக்கத்தை லாக் செய்து உபயோகிக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. மேலும் முகநூல் பக்கத்தை லாக் செய்ய தவறும் பட்சத்தில், தங்களது முகநூலை ஹேக் செய்து மெசஞ்சர் மூலம் கணக்கில் உள்ள நண்பர்களிடம் பண மோசடியில் ஈடுபட வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு!

மயிலாடுதுறை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் எஸ் எஸ் சி பொது பிரிவு காவலர் எழுத்து தேர்வு குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி வருகிற 29ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் நேரில் அல்லது 9499055904 என்ற எண்ணிற்கு விபரங்களை அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு!

மயிலாடுதுறை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் எஸ் எஸ் சி பொது பிரிவு காவலர் எழுத்து தேர்வு குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி வருகிற 29ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் நேரில் அல்லது 9499055904 என்ற எண்ணிற்கு விபரங்களை அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
மயிலாடுதுறை: 300 ஆண்டுகள் பழமையான வாள் திருட்டு!

மயிலாடுதுறை, தரங்கம்பாடி கடற்கரையில் உலகப் புகழ்பெற்ற டேனிஷ் கோட்டையில் அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் தொன்மையான பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இதனை சுற்றுலா வரும் மக்கள் பார்வையிட்டு வந்தனர். இந்நிலையில் அங்கு பாதுகாக்கப்பட்டு வந்த 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாள் ஒன்று காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


