News December 25, 2025
வேலூர்: தொழிலாளி மர்ம மரணம்!

வேலூர் வசந்தபுரம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (35). தொழிலாளியான இவர் நேற்று நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அருண்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 27, 2025
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்.. கலெக்டர் ஆய்வு!

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (டிசம்பர் 27) வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் புதிய வாக்காளர் சேர்க்கை, முகவரி மாற்றம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News December 27, 2025
வேலூர்: லஞ்ச ஒழிப்பு புகார் எண்கள்

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (0416-2220893) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
வேலூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


