News May 1, 2024
மயிலாடுதுறை:காய்கறி செடிகள் பாதிக்கும் அபாயம்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் ஊராட்சி சிங்கா நோடை காழியப்பநல்லூர் ஊராட்சி அனந்தமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு காய்கறி சாகுபடிகள் செய்துள்ளனர்.கத்தரி,வெண்டை,புடலை,பீர்க்கங்காய்,கொத்தவரங்காய்,மிளகாய்,பாகற்காய் என பல வகை காய்கறிகள் சாகுபடி செய்துள்ள நிலையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் செடிகள் இலைகள் உதிர்ந்து கருகும் அபாயம்.
Similar News
News March 12, 2026
மயிலாடுதுறை: மாறுவேடத்தில் வந்து தங்க நகை திருட்டு

மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பழையகூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணகி. இவரது வீட்டிற்கு மாறுவேடத்தில் வந்த மர்ம நபர், கண்ணகீன் 5 பவுன் தங்க சங்கிலி மற்றும் 1 கிராம் தங்க மோதிரத்தை குறி சொல்வது போல நூதன முறையில் திருடி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பாலையூர் போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் மாவட்டத்தை சேர்ந்த சுதாகர் என்ற நபரை நேற்று கைது செய்தனர்.
News March 12, 2026
எஸ்.பி தலைமையில் கொடி அணி வகுப்பு

மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி, மணல்மேடு பகுதிகளில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் இன்று கொடி அணி வகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறையினர் மத்திய ஆயுத காவல் படையான எல்லை பாதுகாப்பு படையினர் (BSF) இணைந்து கொடி அணி வகுப்பு மேற்கொண்டனர்.
News March 11, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மார்ச்.11) இரவு 10 மணி முதல் நாளை (மார்ச்.12) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


