News December 25, 2025

காரில் கடத்தி வந்த 40 கிலோ கஞ்சா பறிமுதல்

image

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் இன்று ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த காரை போலீசார் தடுத்து சோதனை இட்டனர். அப்போது காரில் 40 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து கார், கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கேரளா மலப்புரத்தை சேர்ந்த சதக்கத்துல்லாவை கைது செய்தனர்.

Similar News

News December 27, 2025

திருவள்ளூர்: இல்லத்தரசிகளுக்கு SUPER CHANCE!

image

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., ஏழைப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ‘LIC’ மூலம் ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ எனும் மத்திய அரசு திட்டம் உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி, மாதம் ரூ.7,000 முதல் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையில் கமிஷன்களும் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் அவர்கள் எல்.ஐ.சி முகவராகலாம். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க.( SHARE IT)

News December 27, 2025

திருவள்ளூர்: அக்கா இறந்த சோகத்தில் இளம்பெண் தற்கொலை!

image

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஹேமாஸ்ரீ(23). இவர், நேற்று(டிச.26) தனது தோழியுடன் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த விசாரணையில் இறந்த பெண்ணின் அக்கா யுவஸ்ரீ(24) திருமணமான 10 நாட்களில் தனது கணவரான விஜய்(25) கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அக்கா இறந்த சோகம் தாங்காமல் ஹேமாஸ்ரீ தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

News December 27, 2025

திருவள்ளூர்: மின்சார ரயில்கள் நாளை ரத்து!

image

மீஞ்சூர் – அத்திபட்டு ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை சென்ட்ரல் இருந்து நாளை (டிச.28) காலை 9 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலும், கும்மி..,-யில் இருந்து காலை 9.55, 11.25 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் ரயிலும், கடற்கரை – கும்மி.., நாளை காலை 9.40 கும்மி.., – கடற்., வரும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

error: Content is protected !!