News December 25, 2025

காரில் கடத்தி வந்த 40 கிலோ கஞ்சா பறிமுதல்

image

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் இன்று ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த காரை போலீசார் தடுத்து சோதனை இட்டனர். அப்போது காரில் 40 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து கார், கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கேரளா மலப்புரத்தை சேர்ந்த சதக்கத்துல்லாவை கைது செய்தனர்.

Similar News

News January 13, 2026

திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருவள்ளூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (TASMAC) மதுபான சில்லறை கடைகள் (F.L-1) மற்றும் F.L-2 / F.L-3 வகை மதுபான உரிமம் பெற்ற கடைகள், (ஜன.16) மற்றும் (ஜன.26) ஆகிய தினங்களில் முழுமையாக மூடப்படும் என தெரிவித்தார். மேலும் உத்தரவை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 13, 2026

திருவள்ளூரில் இனி எதற்கும் அலைய வேண்டாம்!

image

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், பான் கார்டு, வோட்டர் ஐடி ஆகியவற்றை விண்ணப்பிக்க அரசு அலுவலகங்களுக்கு செல்கிறீர்களா? இனி அவ்வாறு சென்று அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணப்பிக்கலாம். <>இந்த <<>> லிங்கை கிளிக் செய்தே விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 13, 2026

திருவள்ளூர் கலெக்டர் வழங்கினார்!

image

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில், ஊரக வளர்ச்சி அலகில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நடைபெற்ற தொகுதி IV தேர்வில் தேர்ச்சி பெற்று நியமனம் செய்யப்பட்ட 15 இளநிலை உதவியாளர்களுக்கு, நேற்று(ஜன.12) மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

error: Content is protected !!