News December 25, 2025
நாமக்கல் ஆட்சியர் அறிவிப்பு!

நாமக்கல் வனக்கோட்டத்தை சேர்ந்த 20 ஈரநிலங்களில் வரும் டிச.27 மற்றும் டிச.28 ஆகிய தேதிகளில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பறவைகளின் அசைவு பற்றிய புகைப்படம் எடுக்க ஆர்வம் உள்ள புகைப்பட வல்லுனர்கள், மற்றும் பறவை நிபுணர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News December 26, 2025
நாமக்கல்: gpay, phonepay வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 26, 2025
நாமக்கல் வாக்காளர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள வாக்காளர்கள் மற்றும் வரும் 1-ந் தேதி 18 வயது பூர்த்தியடையும் புதிய வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்கம் (ம)முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் வழங்கிடும் வகையில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும்(ஞாயிற்றுக்கிழமை) வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
News December 26, 2025
நாமகிரிப்பேட்டையில் கூண்டோடு விலகிய நிர்வாகிகள்!

நாமகிரிப்பேட்டை பேரூரை சேர்ந்த முன்னாள் தேமுதிக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் முன்னாள் கவுன்சிலர் எம்.ஜெகதிஸ் தலைமையில் அக்கட்சியிலிருந்து விலகி 10 பேரும், பாஜகவிலிருந்து விலகி 5 பேரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என் ராஜேஷ்குமார் முன்னிலையில் இன்று திமுக தங்களை இணைத்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


