News December 25, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி நேற்று (டிச.22) இரவு முதல் இன்று காலை வரை, காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதி, ஊரகப்பகுதி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை பழனி, கொடைக்கானல், ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொதுமக்கள் காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News December 27, 2025
திண்டுக்கல்: ஆடு, கோழி பண்ணை அமைக்க ரூ.20 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News December 27, 2025
வத்தலக்குண்டு: காதல் வலையில் நகை திருட்டு?

வத்தலக்குண்டை சேர்ந்த மாணவர் பட்டிவீரன்பட்டி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது, மாணவி ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி ஒரு கட்டத்தில் மாணவியை மிரட்டி, வீட்டிலிருந்த 15சவரன் நகைகயை மாணவர் வாங்கினார். வீட்டிலிருந்த நகைகள் மாயமானதை அறிந்தபெற்றோர், மகளிடம் விசாரித்தபோது உண்மை தெரிந்தது.புகாரின்படி, மாணவர், அவருக்குஉடந்தையாக இருந்த மற்றொருவரையும் போலீசார் கைது செய்தனர்.
News December 27, 2025
திண்டுக்கல்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


