News December 25, 2025
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆட்சியர் அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்ய டிசம்பர் 27 மற்றும் 28 ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 1247 வாக்குச்சாவடி மையங்களிலும் 4 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் தகுதியான அனைத்து வாக்காளர்களும் கலந்து கொண்டு தங்களது பெயர்களை சேர்க்கலாம் என்று ஆட்சியர் சந்திரகலா இன்று டிசம்பர் 24ஆம் தேதி தெரிவித்துள்ளார்.
Similar News
News December 26, 2025
ராணிப்பேட்டை: திருமணம், புத்திர தோஷம் நீங்க..!

‘குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்ற தமிழ் பழமொழிக்கு ஏற்ப, இந்த இரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆடிக் கிருத்திகை அன்று இரத்தினங்களால் ஆன ஆடையால் மூலவர் பாலமுருகன் அலங்கரிக்கப்படுவது இதன் சிறப்பாகவும். மேலும், திருமணம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள முருகனை வேண்டுவதால் தோஷம் தீரும் என பக்தர்கள் நம்புகின்றனர். ஷேர் பண்ணுங்க!
News December 26, 2025
ராணிப்பேட்டை: உங்கள் வீட்டிற்கு பட்டா இல்லையா?- CLICK HERE

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News December 26, 2025
ராணிப்பேட்டையில் TNPSC குரூப் தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு

ராணிப்பேட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC GROUP தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு நாளை (டிச.27) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நடைபெற உள்ள இத்தேர்வை எழுத விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் 2 புகைப்படம், ஆதார் அட்டை நகலுடன் தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு இந்த எண்ணை 9952493516 தொடர்பு கொள்ளவும்.


