News December 25, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார்

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று(டிச.24) இரவு 10 மணி முதல் இன்று(டிச.25) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலைய அதிகாரிகளும் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். எனவே மக்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 13, 2026

கடலூர்: நிலம் வைத்திருப்போர் கவனத்திற்கு..

image

கடலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News January 13, 2026

கடலூர்: சொத்து தகராறு, குடும்ப பிரச்சனையா? Whatsapp-ல் தீர்வு!

image

கடலூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News January 13, 2026

கடலூர்: வழிப்பறி செய்தவருக்கு மாவுக்கட்டு போட்ட போலீஸ்

image

சேராகுப்பம் பெட்ரோல் பங்கிற்கு டூவீலர்களில் பெட்ரோல் போட வந்த 4 பேர், பெட்ரோல் பங்க் மேனேஜர் மணிகண்டனிடம் (34) தகறாரில் ஈடுபட்டு, அவரிடம் இருந்த ரூ.5000 பணத்தை பிடுங்கி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தமிழரசன் (29), ரமணன் (29) ஆகியோரை வடலூர் போலீசார் நேற்று கைது செய்தனர். இதில் ரமணன் தப்பி ஓடிய போது, கீழே விழுந்ததில் கை எலும்பு முறிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!