News December 25, 2025
விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

ஜோகில்பட்டி ஊராட்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பின்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
Similar News
News January 6, 2026
விருதுநகர்: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

விருதுநகர் 604039 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கம் ஜன.13 க்குள் அனைவருக்கும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தால் அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 6, 2026
விருதுநகரில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு டோக்கன் விநியோகம்

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் நேற்று முதல் துவங்கியது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 6 லட்சத்து 4,039 அரிசி ரேஷன் கார்டு தாரர்கள், இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்வதற்கான டோக்கன்கள் நேற்று முதல் துவங்கி நாளை வரை ரேஷன் விற்பனையாளர்கள் மூலம் கார்டுகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்படுகிறது.
News January 6, 2026
BREAKING விருதுநகரில் வசூலில் ஈடுபட்ட காவலர் மாற்றம்

விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் ராமச்சந்திரன். இவர் உயர் அதிகாரிகளான இன்ஸ்பெக்ட,ர் எஸ்ஐ ஆகியோரின் உத்தரவுகளை மதிப்பதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ராமச்சந்திரன் வாகனத்தில் பட்டாசுக்கான திரிகளை கடத்திச் செல்பவர்களிடம் பணம் வசூலில் ஈடுபட்டதாக புகார் வந்தது. இது குறித்த விசாரணையில் எஸ்பி கண்ணன் ராமச்சந்திரனை ஆயுதப்படைக்கு இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.


