News December 25, 2025
மதுபோதையில் பெண்ணை தாக்கிய இருவர் கைது

பெரியகுளம் கீழ வடகரை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவரது குடும்பத்தினருக்கும், இவரது வீட்டின் அருகே வசிக்கும் கருப்பசாமி என்பவரது குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கருப்பசாமி மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் மது போதையில் மகேஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரில் பெரியகுளம் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர்.
Similar News
News December 26, 2025
தேனி: கரண்ட் பில் அதிகமா வருதா.? கவலைய விடுங்க!

தேனி மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே<
News December 26, 2025
தேனி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு தேனி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT
News December 26, 2025
தேனி: கார் மோதியதில் தந்தை, மகன், மகள் படுகாயம்!

சில்வார்பட்டியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் நேற்று (டிச.25) அவரது 11 வயது மகன் மற்றும் 4 வயது மகளுடன் திண்டுக்கல்-தேனி பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கிருஷ்ணா என்பவர் ஓட்டி வந்த கார் இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் காயமடைந்த மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.


