News December 25, 2025
அந்தியோதயா ரயில் வேகம் அதிகரிப்பு

நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு அந்தியோதயா ரயில் சென்று வருகிறது. இந்த ரயில் வருகிற ஜன.1 முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றப்படுகிறது. அதன்படி இந்த ரயிலின் வேகம் அதிகரிக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து புறப்படும் இந்த ரெயில் காலை 5.50 மணிக்கு பதிலாக 5.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 1, 2026
குமரி: இனி நம்ப ஊரிலேயே IT வேலை

ஐடி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், நெல்லை, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதற்காக தற்போது தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பூங்காவிலும் குறைந்தது 500 – 1,000 பேர் வரை தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT
News January 1, 2026
குமரி: டூவீலர் விபத்தில் முதியவர் பலி

மூலச்சல் பகுதி சுதாமணி (55) தனது பேரன் அபின்ராஜூடன் (19) டிச.30.ம் தேதி இரவு அருகில் உள்ள திருமணவிழாவுக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். அப்போது புறத்தால்விளையை சேர்ந்த தங்கராஜ் (72) ஓட்டி வந்த பைக் அவர்கள் மீது மோதியது. தங்கராஜ் தூக்கி வீசப்பட்டார். காயமடைந்த 3பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி தங்கராஜ் இறந்து போனார். தக்கலைபோலீசார் விசாரணை நடத்தினர்
News January 1, 2026
குமரி: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை!

குமரி மாவட்ட மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <


