News December 24, 2025

நாகை: குறைகள் கேட்டறிந்த எஸ்பி!

image

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று(டிச.24) நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளர்
சு. செல்வகுமார் தலைமை தாங்கி, பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 10 மனுக்களை பெற்ற அவர், பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

Similar News

News February 15, 2026

நாகை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 15, 2026

நாகை கலெக்டர் கடும் எச்சரிக்கை

image

நாகை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், வெளி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளின் நெல் அல்லது வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது. இதனை மீறும் பட்சத்தில் நேரடி நெல் கொள்முதல் பணியாளர்கள் மீதும், நெல் விற்பனை செய்தவர் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் எச்சரித்துள்ளார்.

News February 15, 2026

நாகை: குளத்திற்கு குளிக்கச் சென்ற பூசாரி உயிரிழப்பு

image

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோவில்தாவு பகுதியைச் சேர்ந்த இளங்கோவன். பிச்சக்கொடை அய்யனார் கோவில் பூசாரியான இவர், நேற்று (பிப்.14) காலையில் குளத்தில் குளிக்க சென்ற போது படிக்கட்டில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். தவலறிந்து வந்த தீயணைப்புத்துறைடினர் உடலை மீட்டனர். அதனை தொடர்ந்து, வேதாரண்யம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!