News December 24, 2025
மதுரை: டூவீலரில் இருந்து கீழே விழுந்து பெண் பலி.!

மதுரை சாமநத்தத்தைச் சேர்ந்த சந்தோஷ் தனது டூவீலரில் பாட்டி ஜெயா(70) வை அழைத்துக் கொண்டு, அய்யனார்புரம் சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தார். ஹரிஷ் ஓட்டல் அருகே டூவீலரில் இருந்து ஜெயா தவறி கீழே விழுந்தார். மதுரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். விபத்து குறித்து சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 28, 2025
மதுரை: மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை.!

மேலூர் சொக்கம்பட்டியை சேர்ந்தவர் நாகப்பிரகாஷ்(54). மது போதைக்கு அடிமையான இவரை மனைவி சுப்புலட்சுமி தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த நாக பிரகாஷ் நேற்று (டிச.27) வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய மேலூர் போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News December 28, 2025
மதுரை: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை!

மதுரை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. கடைசி தேதி டிச.23 அன்று முடிவடைய இருந்த நிலையில் விண்ணப்ப தேதி ஜன 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது., 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News December 28, 2025
மதுரை: டூவீலரிலிருந்து விழுந்து பெண் பலி

விருதுநகர் சாத்தூரை சேர்ந்த மெஹர் பானு(47), அவரது சகோதரர் ஷேக் முகமது(22) ஆகியோர் டூவீலரில் திருமங்கலம் – விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் சென்றனர். சிவரக்கோட்டை சர்வீஸ் ரோட்டில் வேகத்தடையில் டூவீலர் வேகமாக ஏறி இறங்கியதில் மெஹர் பானு தடுமாறி கீழே விழுந்தார். படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு உயிரிழந்தார். சம்பவம் பற்றி கள்ளிக்குடி போலீஸ் விசாரிக்கின்றனர்.


