News May 1, 2024

10-க்கும் மேற்பட்டோர் போக்சோ சட்டத்தில் கைது

image

நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து நெல்லை டவுன் அனைத்து மகளிர் ஸ்டேஷன் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் நாகராஜை நேற்று (ஏப்.30) கைது செய்தனர். இதனால் ஏப்ரல் மாதத்தில் மட்டும் மாவட்டம் முழுவதும் போக்சோ சட்டத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 17, 2025

நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

image

பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி பல்வேறு கட்சிகள் சார்பில் காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.
காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுகுமார் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருநெல்வேலி சந்திப்பு சாலை குமரன் கோயிலில் இரவு 7:00 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது.

News September 17, 2025

நெல்லை: பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1500

image

நெல்லை மக்களே; 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 11.10.2025 அன்று நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்பிக்கலாம். (தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும்) *ஷேர்

News September 17, 2025

நெல்லை: ஆதாரில் திருத்தம் செய்ய வேண்டுமா?

image

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அஞ்சல் துறை சார்பில் சிறப்பு ஆதார் முகாம் அம்பாசமுத்திரம் வேலுச்சாமி திருமண மண்டபத்தில் வைத்து இன்று(செப்.17) காலை 11 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் ஆதார் பெயர் மாற்றம், திருத்தம், போன் நம்பர் இணைப்பு போன்ற சேவைகளை இதில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!