News December 24, 2025
நாகை: டிபன் கடை தொடங்க ரூ.50,000 கடன்!

பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசின் அன்னபூர்ணா யோஜனா திட்டத்தின் மூலம் ஹோட்டல், டிபன் கடை, கேட்டரிங் தொழில் தொடங்க ரூ.50,000 கடன் உதவி வழங்குகிறது. மேலும் கடனுக்கான முதல் தவணையைச் செலுத்தத் தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகவும். மேலும் அறிய நாகை மாவட்ட சமுக நல அலுவலரை அணுகலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.(தொடர்ச்சி)
Similar News
News December 25, 2025
நாகை: CPM செயலாளர் சண்முகம் நினைவஞ்சலி

நாகை மாவட்டம் கீழ்ண்மணியில், 57-ம் ஆண்டு தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் நினைவு சின்னத்தில், CPM மாநில செயலாளர் சண்முகம், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், வாசுகி, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.
News December 25, 2025
அடையாள எண் பெற: நாகை ஆட்சியர் அறிவிப்பு!

நாகை மாவட்ட விவசாயிகள் டிச.28-ஆம் தேதிக்குள் தனித்துவ அடையாள எண் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசு திட்டங்கள், பிரதம மந்திரி கௌரவத் தொகை, பயிர்க் காப்பீடு பெற இந்த எண் அவசியம் எனவும், விவசாயிகள் அருகிலுள்ள கணினி சேவை மையம் அல்லது வேளாண்மை அலுவலகங்களுக்குச் சென்று ஆதார், கைப்பேசி எண், பட்டா விவரங்கள் கொடுத்து எண்ணைப் பெறலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
நாகை: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் உதவி!

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம், பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறுதொழில் தொடங்க நினைப்போர், இந்த கடனுதவியை பெற <


