News December 24, 2025

சிவகங்கை: தொழில்முனைவோர் ஆகுறது உங்க கனவா?

image

சிவகங்கை வாசிகளே! தொழில் முனைவோர்களை ஊக்கபடுத்தும் விதமாக தமிழக அரசின் தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (NEEDS) உள்ளது. ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி இத்திட்டத்தில் கடனுதவி பெறலாம். இதற்கு விண்ணப்பித்து உங்கள் தொழில் முனைவோர் கனவை நினைவாக்குங்கள். இங்கு CLICK செய்து அப்ளை செய்து கொள்ளுங்கள். மேலும் தகவல்களுக்கு மதுரை மாவட்ட தொழில் மையத்தை அனுகவும். SHARE பண்ணுங்க.

Similar News

News December 27, 2025

சிவகங்கை: 13 வயது சிறுவன் மீது மோதிய டூவீலர்

image

காளையார் கோவில் அருகே உள்ள செந்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த காளீஸ்வரி என்பவரின் 13 வயது மகன், அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காளீஸ்வரி காளையார் கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 27, 2025

சிவகங்கை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 27, 2025

சிவகங்கை: இளம்பெணை தற்கொலைக்கு தூண்டிய பெண்

image

தேவகோட்டை அருகே அரையாணி பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை, கற்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும், முன்னர் காதலித்த நபருடன் இருந்த புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் பரப்பியதாகவும், அதே பகுதியை சேர்ந்த பிரியா மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த இளம்பெண் பினாயில் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்

error: Content is protected !!