News May 1, 2024

குளித்தலை: அரசு பஸ் மோதி 7 பேர் படுகாயம்

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குறப்பாளையம் பிரிவு சாலையில் வேன் மீது எதிரே வந்த அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுசீந்திரன், பழனிச்சாமி, விமலா, ஸ்ரீவித்யா ராமாயி புவனேஸ்வரி ஆக 7 பேரும் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். திருக்கடையூரில் உள்ள உறவினரின் 60-வது திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Similar News

News September 20, 2025

கரூர்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

கரூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.

News September 20, 2025

கரூர்: கிராம வங்கியில் வேலை! APPLY NOW!

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம், தமிழ்நாடு கிராம வங்கியில் காலியாக உள்ள, Office Assistant, உள்ளிட்ட 13,217 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் இரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (செப்.21) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்

News September 20, 2025

கரூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

கரூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செப்.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஆண்டிசெட்டிபாளையம், கோடந்தூர், வடகரை, காட்டாம்பட்டி, சின்னதாராபுரம், அகிலாண்டபுரம், எல்லமேடு, எலவனூர், புஞ்சை, நஞ்சை காளக்குறிச்சி, அணைப்புதூர், க.பரமத்தி, நெடுங்கூர், பூலாம்பட்டி, கார்வழி, தென்னிலை, மலைக்கோவிலூர், கனகாபுரி, நொய்யல், அத்திப்பாளையம், வடக்கு நொய்யல், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

error: Content is protected !!