News December 24, 2025
JUST NOW: கள்ளக்குறிச்சியில் தடை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வரும் 26-ம் தேதி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் டிச.25, 26 ஆகிய இரண்டு நாட்கள் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 30, 2025
கள்ளக்குறிச்சி: கர்ப்பிணிகளுக்கு அனைத்தும் இலவசம்!

கள்ளக்குறிச்சி மக்களே.. அரசு மருத்துவமனையில் குழந்தையை பெற்றேடுக்கும் தாய்மார்களுக்கு அனைத்து சலுகைகளும், மத்திய அரசின் JSSK திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.
1) இலவச டெலிவரி (சிசேரியன் உட்பட)
2) இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள்
3) ஊட்டச்சத்து நிறைந்த இலவச உணவு
4) இலவச ஆம்புலன்ஸ் வசதி
5) இலவச தங்குமிடம்.
இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 30, 2025
கள்ளக்குறிச்சி: தீராத வயிற்றுவலி – முதியவர் சோக முடிவு!

கள்ளக்குறிச்சி: வடசிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையாப்பிள்ளை (79). இவர் சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் நெல்லுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News December 30, 2025
கள்ளக்குறிச்சி: சிறுமி கர்ப்பம் – சிறுவனுக்கு போக்சோ!

கள்ளக்குறிச்சி: பெரம்பலூரில் இருந்து ஒரு தம்பதியினர் கிணறு வெட்டும் பணிக்காக சின்னசேலம் வந்துள்ளனர். இவர்களது மகள் (14) 9ம் வகுப்பில் பயின்று வருகிறார். இந்நிலையில், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன், சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், சிறுவன், சிறுமியை பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பம் அடைந்தார். இதுகுறித்த புகாரில் சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிந்துள்ளனர் போலீசார்.


