News December 24, 2025
நெல்லை: பணப் பறிப்பில் ஈடுபட்டவர் குண்டாஸில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர் மகாராஜன் என்பவரை பாளை இரயில் நிலையத்தில் மிரட்டி, பணம் பறித்துள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறி அன்பழகன் நேற்று போலீஸ் கமிஷனர் சந்தோஸ் ஹாதிமணி உத்தரவில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News January 17, 2026
நெல்லை: கிராம வங்கியில் ரூ.32,000 சம்பளத்தில் வேலை! APPLY

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
News January 17, 2026
நெல்லை: வீட்டில் கொள்ளையடித்த இரு கொள்ளையர்கள் கைது

சுத்தமல்லியை சேர்ந்த மூதாட்டி ஆண்டிச்சி என்பவரை கடந்த 8ம் தேதி மர்ம நபர்கள் வீடு புகுந்து கட்டி போட்டு 25 சவரன் தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் சிசிடிவி கட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்ததில் வேட்டையை சேர்ந்த மணிகண்டன் ஜீவா ஆகிய இருவரும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. சென்னையில் நகைகளை மாற்றிய போது நேற்று இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
News January 17, 2026
நெல்லை: மலம் கழிக்க சென்றவர் கொலை; பிண்ணனி இதோ!

பாப்பாக்குடி அருகே அடைச்சாணி பகுதியை சேர்ந்த சரவணன் (47) பைக் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு டயர் பஞ்சர் பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று பனை தோட்டத்துக்கு மலம் கழிக்க சென்றபோது மர்ம நபரால் வெட்டி கொல்லப்பட்டார். பாப்பாக்குடி போலீஸ் விசாரணையில் உறவினர் பாலமுருகன்(30) குடும்ப தகராறில் கொலை செய்தது தெரியவந்ததால் போலீஸார் அவரை கைது செய்தனர்.


