News December 24, 2025
புதுக்கோட்டை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

புதுக்கோட்டை மாவட்ட மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 25, 2025
புதுகை: வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

புதுகை மாவட்டத்தில் வருகிற 27, 28 மற்றும் ஜன.3, 4 ஆகிய 4 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1681 ஓட்டு சாவடி மையங்களிலும் புதிய வாக்காளர் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதில் விடுபட்ட வாக்காளர்கள், SIR படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம் எனவும் 18 வயது முடிந்தவர்கள் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம் எனவும் கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
புதுகை: கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய எண்கள்

புதுக்கோட்டை மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு உதவி எண்கள்.
1. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04322-221695,
2. பேரிடர் கால உதவி -1077,
3. குழந்தைகள் பாதுகாப்பு – 1098,
4. பாலியல் துன்புறுத்தல் உதவி – 1091,
5. காவல் துறை துணை கண்கானிப்பாளர் – 04322-222236,
6. விபத்து அவசர வாகன உதவி – 102.
இந்த தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News December 25, 2025
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

புதுக்கோட்டையில் TNPSC குரூப்-2, 2ஏ தேர்வுக்கு சிறந்த வல்லுனர்களை கொண்டு கடந்த 18ஆம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பயிற்சியில் சேர விரும்பும் மாணவ மாணவியர் Passport size photo, ஆதார் அட்டை, நுழைவுச் சீட்டு நகலுடன் புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!


