News December 24, 2025
நாமக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 26, 2025
பள்ளிப்பாளையத்தில் வசமாக சிக்கிய இருவர்!

பள்ளிப்பாளையம் டி.எஸ்.பி., கவுதம் தலைமையில், வெப்படை போலீசார் நேற்று அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, பச்சாம்பாளையம் பகுதியில் உள்ள பேக்கரியில் தடை செய்யப்பட்ட புகை யிலைகளை விற்பனை செய்து கொண்டிருந்த குமார் (49), மற்றும் வெங்கடாசலம் (46) ஆகிய இரண்டு பேரை வெப்படை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவர்களிடம் இருந்து புகை யிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
News December 26, 2025
மல்லசமுத்திரம் அருகே விபத்து! VIDEO

சின்னதம்பிபாளையம் அருகே நேற்று (டிச.25) டெம்போ ஒன்று திடீரென கட்டுபாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் இல்பான் லேசான காயங்களுடன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். டெம்போவில் பயணம் செய்த 8 பேர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களும் இல்லாமல் உயிர்தப்பினர். இது குறித்து மல்லசமுத்திரம் எஸ்ஐ கவி பிரியா விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
News December 25, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் நலன் கருதி, ‘எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம்’ வரும் டிச. 29., அன்று பிற்பகல் 3 மணி அளவில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர் நாள் கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தகவல். SHARE IT


