News December 24, 2025
கள்ளக்குறிச்சியில் தொடரும் நாய்க்கடி சம்பவங்கள்!

கள்ளக்குறிச்சி: புதுப்பாலப்பட்டு செல்லும் சாலையில் 3 பள்ளிகள் உள்ளன. நேற்று வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது, 1 மாணவி மற்றும் 3 மாணவர்களை அங்கு சுற்றிக்கொண்டிருந்த தெரு நாய் விரட்டி விரட்டி கடித்தது. இதில் 4 பேரும் காயமடைந்துள்ளனர். சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் கடந்த 2 நாட்களில் தெரு நாய் கடித்து 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Similar News
News December 27, 2025
கள்ளக்குறிச்சியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

கள்ளக்குறிச்சியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. வரும் (ஜன.10) சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை இந்திலி, DR.R.K.S கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10வது,12வது,டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.இம்முகாம் குறித்த விவரங்களுக்கு 04151-295422 / 245246 தொடர்புகொள்ளவும்.வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.
News December 27, 2025
கள்ளக்குறிச்சி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 27, 2025
கள்ளக்குறிச்சி: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


