News December 24, 2025

விழுப்புரம்: கஞ்சா விற்ற வட மாநிலத்தவர்கள் கைது!

image

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆரோமா கார்டன் அருகே நேற்று, மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ரிபான்ஸ்க் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகாதேவ் குமார் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் நேற்று இரண்டு போரையும் கையும் களவுமாக கைது செய்து, அவர்களிடம் இருந்து 2.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News

News January 13, 2026

விழுப்புரம்:ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 13, 2026

மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் இன்று (ஜன.13) நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார் கலந்து கொண்டார்.

News January 13, 2026

விழுப்புரம் மக்களே ₹41,000 ஊதியத்தில் வங்கி வேலை!

image

விழுப்புரம் மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான இண்ட்பேங்கில் Relationship Manager, Digital Marketing உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் ஓராண்டு அனுபவம் உள்ளவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். மாத சம்பளமாக ரூ.41,000 வழங்கப்டும். விருப்பமுள்ளவர்கள் <>இண்ட்பேங்க்<<>> இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு இந்த அறிய வாய்ப்பைப் பகிருங்கள்!

error: Content is protected !!