News December 24, 2025
புதுவை: விபத்தில் சிக்கிய முதியவர்!

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் (67) என்பவர் நேற்று முன்தினம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்குச் செல்வதற்காகத் திருநள்ளாறு – அம்பகரத்தூர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஸ்கூட்டர் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியதில் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில், காரைக்கால் வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 28, 2025
புதுச்சேரி: ரூ.20 கட்டினால் போதும் ரூ.2 லட்சம் வரை காப்பீடு!

மத்திய அரசின் PMSBY காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் பெறலாம். இதில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். பாலிசிதாரருக்கு தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் அவரது நாமினிக்கு தொகை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க அருகில் உள்ள வங்கி அல்லது அரசு காப்பீட்டு நிறுவனங்களை அணுகவும். சந்தேகங்களுக்கு 1800345033 என்ற எண்ணை அழைக்கவும். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 28, 2025
புதுச்சேரி: ரூ.20 கட்டினால் போதும் ரூ.2 லட்சம் வரை காப்பீடு!

மத்திய அரசின் PMSBY காப்பீட்டு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் பெறலாம். இதில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்கள் சேரலாம். பாலிசிதாரருக்கு தற்செயலான மரணம் அல்லது ஊனம் ஏற்பட்டால் அவரது நாமினிக்கு தொகை வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க அருகில் உள்ள வங்கி அல்லது அரசு காப்பீட்டு நிறுவனங்களை அணுகவும். சந்தேகங்களுக்கு 1800345033 என்ற எண்ணை அழைக்கவும். மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News December 28, 2025
புதுச்சேரி: கடை பூட்டை உடைத்து ரூ1.02 லட்சம் திருட்டு

புதுவை, நீடராஜப்பையர் வீதியில் மளிகை கடை நடத்தி வருபவர் நிஷாந்த், இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வழக்கம் போல் நேற்று காலை, கடையை திறக்க சென்றபோது, கடையின் ஷட்டரில் பூட்டு இல்லாமல் இருந்தது. இதனைக் கண்ட நிஷாந்த் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.1.02 லட்சம் திருடு போயிள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


