News December 24, 2025

மதுரையில் லிப்ட் கேட்டு டூவீலரை பறித்து சென்ற சம்பவம்

image

மதுரை, திருமங்கலம் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம்(49) கட்டட தொழிலாளி கப்பலூரில் வேலை செய்து வருகிறார். மதியம் டீ குடிக்க ரிங் ரோட்டில் உள்ள புளியங்குளத்திற்கு டூவீலரில் சென்றார். அப்போது 28 வயது நபர் லிப்ட் கேட்டு பயணித்தார். சிறிது தூரம் சென்ற பிறகு ஆறுமுகத்தை அவர் கீழே தள்ளி விட்டு டூவீலரை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். திருமங்கலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News December 27, 2025

மதுரை: ரேஷன் கார்ட் இருக்கா… முக்கிய அறிவிப்பு… டிச.31 கடைசி

image

மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் வரும் டிச.31-ம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு (e-KYC) செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.ரேஷனர் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க

News December 27, 2025

மதுரை அருகே 19 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் மருது பாண்டி 19. இவர் நேற்று மாலை வெளியில் சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு வந்த பொழுது அவரது தந்தை தாயாருடன் தகராறு செய்வதை பார்த்து கண்டித்துள்ளார். இது தொடர்பாக தந்தை மகன் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியது. இதில் மனம் உடைந்த மருதுபாண்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News December 27, 2025

மதுரையில் ஆற்றில் குளிக்க சென்றவருக்கு நேர்ந்த சோகம்

image

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் முத்தையா மகன் முத்துப்பாண்டி(25). இவரது மனைவி காயத்ரி கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துப்பாண்டி திருவேடகம் அருகில் செல்லும் வைகை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி பலியானார். இது குறித்து சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!