News December 24, 2025
கோவை மக்களே: இன்று இங்கு கரண்ட் இருக்காது!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (டிச.24) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, சின்னியம்பாளையம், கரையாம்பாளையம், மையிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், சிட்ரா ஒரு பகுதி, கோல்ட்வின்ஸ் ஒரு பகுதி, கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, அண்ணா பல்கலை வளாகம், பாரதியார் பல்கலை வளாகம், மருதமலை அடிவாரம், நாவவூர் பிரிவு, பொம்மணம்பாளையம், டாடா நகர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News December 27, 2025
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (27.12.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 27, 2025
எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

கோவை, நீலகிரியில் பறவைக் காய்ச்சல் பீதியால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்தன. அவற்றின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்ததில் பறவை காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
News December 27, 2025
கோவை: ரூ.5 லட்சம் காப்பீடு விண்ணப்பிப்பது எப்படி

கோவை: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். (SHARE)


