News December 24, 2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள் மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மாதம் ரூ.2000 உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். தேவையான ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 5ஆம் தளம் அறை எண்.517 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மயிலாடுதுறை-609305 என்ற முகவரியில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.
Similar News
News December 27, 2025
மயிலாடுதுறை: மேம்பாலம் திறக்கும் தேதி அறிவிப்பு

மயிலாடுதுறை நகரில் உள்ள சாரங்கபாணி நினைவு ரயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் வருகிற ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் நேற்று தெரிவித்தார். அதேபோல் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையம் வருகிற ஜனவரி 15ஆம் தேதிக்குள் திறந்து வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
மயிலாடுதுறை: பெண் குழந்தை உள்ளதா? இதை பண்ணுங்க!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், 2 அல்லது 3 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்ககள் உள்ளிட்ட விவரங்களை அறிய திருச்சி மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். ஷேர் பண்ணுங்க
News December 27, 2025
மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு!

மயிலாடுதுறை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் எஸ் எஸ் சி பொது பிரிவு காவலர் எழுத்து தேர்வு குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி வருகிற 29ஆம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் நேரில் அல்லது 9499055904 என்ற எண்ணிற்கு விபரங்களை அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.


