News May 1, 2024
தேர்தல் ஆணையம் மக்களை தண்டிக்கிறது

மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் தேர்தல் ஆணையத்தால் தண்டனை தான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டதால் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேர்தல் ஆணையம் தளர்வு அளித்திருக்கலாம் எனவும், ஆனால், கோடை காலத்தில் தண்ணீர் பந்தல் அமைப்பதற்குக் கூட அனுமதியளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 20, 2026
அடுத்த ரேஸில் களமிறங்கும் அஜித்!

க்ரெவெண்டிக் 24H சீரிஸ் ஐரோப்பிய தொடரில் இன்று அஜித் பங்கேற்க உள்ளார். Ajith RedAnt Racing என்ற பெயரில் களமிறங்கும் அவரது அணியில், அவருடன் இணைந்து கோபி டி பிரூக்கர், அய்ர்டன், யானிக் ஆகியோர் ரேஸில் கலக்க உள்ளனர். இந்த ரேஸில் அஜித் Mercedes-AMG GT3 EVO ரக காரைப் பயன்படுத்த உள்ளாராம். துபாய் தொடரில் கோப்பையை வெல்ல தவறியதால், இதில் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற உத்வேகத்துடன் அவர் இருக்கிறாராம்.
News March 20, 2026
ஈரான் போருக்காக மேலும் ₹18 லட்சம் கோடியை இறைக்கும் US

ஈரானுடனான போரைத் தொடர்வதற்காக, பென்டகன் அமெரிக்க காங்கிரஸிடம் 200 பில்லியன் டாலர் (₹18 லட்சம் கோடி) கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது ஈரானியப் பொருளாதாரத்தின் (356 பில்லியன் டாலர்) பாதிக்கும் மேலாகும். போரின் முதல் வாரத்திலேயே அமெரிக்கா 11 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிட்டது. போருக்காக அமெரிக்கா அதிகப்படியாக செலவிடுவதற்கு அந்நாட்டின் எதிர்க்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
News March 20, 2026
கவிஞர் கண்ணதாசன் பொன்மொழிகள்

*நிம்மதி என்பது பிறர் கொடுப்பது அல்ல, நாமே ஏற்படுத்திக் கொள்வது. *முதலில் யார் மீதாவது குற்றம் சாட்ட விரும்பினால், உன் மீதே சாட்டு. *கருணை பொங்கும் உள்ளம், அது கடவுள் வாழும் இல்லம். *உண்மையைச் சொல்பவன் உறவை இழக்கிறான். உறவை விரும்புபவன் உண்மையை இழக்கிறான். *மனிதனுடைய திறமை பெரிதல்ல, கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனைப் பிரகாசிக்கச் செய்கிறது.


