News December 23, 2025

திண்டுக்கல் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுகிறார்கள். அதன்படி இன்று 23.12.2025 செவ்வாய்க்கிழமை காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதி, ஊரகப்பகுதி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, பழனி, கொடைக்கானல், ஆகிய பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் அவசர உதவிக்கு காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News December 26, 2025

திண்டுக்கல் ஆண்களே உஷார்!

image

இணையத்தில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலர் காதல் பேச்சு, நட்பு எனப் போலி சுயவிவரங்கள் மூலம் நம்பிக்கை பெற்று பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், ஏமாற்றத்துக்கு ஆளானால் உடனே 1930 எண்ணை அழைக்கவும் <>www.cybercrime.gov.in<<>>-ல் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 26, 2025

திண்டுக்கல்: B.E/B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE செய்யுங்க.

News December 26, 2025

திண்டுக்கல்லில் இறந்தவர்களின் ஓட்டு யாருக்கு?

image

திண்டுக்கல்லில் 3.24 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், ஆத்தூர் தொகுதி பாப்பனம்பட்டியில் 9 மாதங்களுக்கு முன் இறந்த பத்மாவதி மற்றும் 4.5 ஆண்டுகளுக்கு முன் இறந்த பிச்சைமணி உள்ளிட்ட பலரது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் மீண்டும் இடம்பெற்றுள்ளது என தேமுதிக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பவுன்ராஜ் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து கள ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை!

error: Content is protected !!