News December 23, 2025
திருப்பூர் பொதுமக்களுக்கு காவல்துறை அறிவிப்பு

திருப்பூர் மாநகரில் இன்று (23/12/2025) இரவு ரோந்து அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர தேவைக்கு கீழ்கண்ட அதிகாரிகளின் எண்கள் அல்லது 100ஐ அழைக்கலாம். இரவு நேரங்களில் ஏற்படும் குற்ற சம்பவங்களை உடனடியாக ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News January 4, 2026
திருப்பூரில் தட்டி தூக்கிய போலீஸ்

திருப்பூர், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வளையங்காடு பகுதியில் அனுப்பர்பாளையம் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை சோதனை செய்தபோது அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து பாலமுருகன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 114 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
News January 4, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் 2026-ம் ஆண்டிற்கான திருநங்கையர் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். சுய முயற்சியால் முன்னேறி, குறைந்தபட்சம் 5 திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு உதவியவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். ஆர்வமுள்ளவர்கள் பிப்ரவரி 2-ம் தேதிக்குள் awards.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
News January 4, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில் 2026-ம் ஆண்டிற்கான திருநங்கையர் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார். சுய முயற்சியால் முன்னேறி, குறைந்தபட்சம் 5 திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு உதவியவர்கள் இதற்குத் தகுதியானவர்கள். ஆர்வமுள்ளவர்கள் பிப்ரவரி 2-ம் தேதிக்குள் awards.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


