News December 23, 2025
JUST IN திருச்சி: உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் டிச.30-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் ஜனவரி.24-ம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 11, 2026
திருச்சி: தொலைந்த CERTIFICATE-ஐ மீட்க எளிய வழி!

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு <
News January 11, 2026
திருச்சி மாவட்டத்தில் மழை தொடரும்

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் புயல் சின்னங்கள் காரணமாக தமிழகக்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (ஜன.11) திருச்சி மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News January 11, 2026
திருச்சி மாவட்டத்தில் 304.5 மி.மீ மழை பதிவு

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜன.10) காலை முதல் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக பொன்மலை பகுதியில் 33.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும் ஜங்ஷன் பகுதியில் 25.8 மி.மீ, நவலூர் குட்டப்பட்டு பகுதியில் 20.5 மி.மீ, மருங்காபுரி பகுதியில் 24.4 மி.மீ மாவட்டம் முழுவதும் 304.5 மில்லி மீட்டரும், சராசரியாக 12.69 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


