News December 23, 2025

காரைக்கால்: அரசு ஊழியர்களுக்கு அரசாணை வெளியீடு

image

காரைக்கால் (டிச.23) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் புதிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் பணியின் போதோ, அல்லது ஒய்வு பெற்றோ இறந்துவிட்டால், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள், மற்றும் நிதி சார்ந்த தணிக்கைத் தடைகள் அனைத்தும் தானாகவே ரத்தாகிவிடும். அது சார்ந்து எந்தவித ஒய்வூதியப் பலன்களையும் நிறுத்தக் கூடாது என அரசாணை வெளியிட்டுள்ளது.

Similar News

News January 10, 2026

புதுவை: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் வரை காப்பீடு

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். SHARE IT

News January 10, 2026

புதுவை – திருப்பதி ரயில் நேரம் மாற்றம்

image

புதுவையிலிருந்து தினமும் இயக்கப்படும் திருப்பதி பயணிகள் ரயில் நேரம் ஜன.19 முதல் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி புதுவை ரயில் நிலையத்தில் இந்த ரயில் தினமும் பிற்பகல் 2:50 மணிக்கு புறப்படுகிறது. இனி இது பிற்பகல் 2:40-க்கு புறப்படும். வில்லியனூா் ரயில் நிலையத்தில் இந்த ரயில் 2:59 முதல் 3 மணி வரை நின்று செல்லும். ஆனால் இனி இந்த ரயில் அங்கு 2:49 முதல் 2:50 வரை நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 10, 2026

புதுவை கலெக்டர் கொடுத்த முக்கிய உத்தரவு

image

புதுவை கலெக்டர் அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ஒழிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் குலோத்துங்கன் தலைமை வகித்தார். மேலும் சீனியர் எஸ்.பி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தனியார் கொரியர் நிறுவனங்கள் மூலம் பார்சல் எடுத்து வரும் பொழுது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வருகின்றனவா என்பது குறித்து போலீசார் கண்காணிக்க வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டார்.

error: Content is protected !!