News December 23, 2025
இலங்கைக்கு, இந்தியா ₹4,000 கோடி நிதியுதவி

இலங்கைக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் அநுர குமார திசநாயகே, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் விஜித் ஹெராத்தை சந்தித்து பேசினார். அப்போது, டிட்வா புயல் சேதங்கள் குறித்து கேட்டறிந்த ஜெய்சங்கர், சீரமைப்பு பணிகளுக்காக இலங்கைக்கு, இந்தியா சார்பில், சுமார் ₹4,000 கோடி நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்தார். பாதிப்பில் இருந்து மீண்டுவர இந்தியா துணைநிற்கும் என்றும் கூறினார்.
Similar News
News December 30, 2025
ICC தரவரிசை பட்டியலில் ஷபாலி முன்னேற்றம்!

2025-ம் ஆண்டின் கடைசி மகளிர் டி20 தரவரிசை பட்டியலை ICC இன்று வெளியிட்டது. அதில் பேட்டர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் இருந்த இந்தியாவின் அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஸ்மிருதி மந்தனா அதே 3-வது இடத்தில் நீடிக்கிறார். ஜெமிமா ஒரு இடம் பின்தங்கி 10-வது இடத்திற்கு சென்றார். பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் தீப்தி ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
News December 30, 2025
குழந்தைகளுக்கு கண்டிப்பா இத சொல்லிக்கொடுங்க!

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைக்கு 13 வயது ஆகிவிட்டதா? நிதி & சேமிப்பு பற்றி சொல்லிக்கொடுங்கள் ➤அத்தியாவசிய தேவைகள் மற்றும் விருப்பங்களை வேறுபடுத்திப் பார்க்க கற்றுக்கொடுங்கள் ➤வங்கி சேமிப்பு கணக்கு மூலம் பணத்தை சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ➤தேவையில்லாத கடன்களை வாங்குவதால் வரும் விளைவுகள் பற்றி கற்றுக்கொடுங்கள் ➤காப்பீடு தொடங்குவதன் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரையுங்கள். SHARE.
News December 30, 2025
பொருளாதார நிபுணர்களுடன் PM மோடி ஆலோசனை

2026-27-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்.1-ம் தேதி, FM நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பட்ஜெட் தொடர்பாக, நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களுடன் PM மோடி ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் நிர்மலா சீதாராமன், நிதிஆயோக் துணைத்தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


