News December 23, 2025

இராம்நாடு: தனியார் பேருந்தில் 31 பவுன் நகை கொள்ளை

image

திருவாடானை அருகே கீழக்குடியைச் சேர்ந்தவர் தொண்டியம்மாள்(50). இவர் தனது பேரன் பிறந்த நாள் விழாவுக்காக கோவை சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு தனியார் பேருந்தில் ஊருக்குப் புறப்பட்டார். நேற்று காலை பேருந்து திருவாடானைக்கு வந்தது. அப்போது தொண்டியம்மாள் தனது பையைப் பார்த்தபோது, அதிலிருந்த 31 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. திருவாடானை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 27, 2025

இராமநாதபுரம் GH-ல் அம்மா உணவகம் மீண்டும் திறப்பு

image

இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று (டிச.26) அம்மா உணவகம் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து இன்று மீண்டும் திறக்கப்பட்டது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

News December 27, 2025

இராம்நாடு: இலவச சிசிடிவி கேமரா பயிற்சி

image

ராமநாதபுரம் மாவட்டம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து சாந்த் பிவி காம்ப்ளக்ஸ் 154 பகுதியில், கண்காணிப்பு கேமரா பாதுகாப்பு அலாரம், ஸ்மோக் டிடெக்டர் பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் இலவச பயிற்சி வருகின்ற ஜன.5 தேதி ஆரம்பிக்கப்படவுள்ளது.13 நாட்கள் பயிற்சி நடைபெறும். பயிற்சி நேரம் 9:30AM முதல் 5:00PM வரை. மேலும் தகவலுக்கு 8825954443, 8056171986 *ஷேர் பண்ணுங்க

News December 27, 2025

இராம்நாடு: இலவச சிசிடிவி கேமரா பயிற்சி

image

ராமநாதபுரம் மாவட்டம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து சாந்த் பிவி காம்ப்ளக்ஸ் 154 பகுதியில், கண்காணிப்பு கேமரா பாதுகாப்பு அலாரம், ஸ்மோக் டிடெக்டர் பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் இலவச பயிற்சி வருகின்ற ஜன.5 தேதி ஆரம்பிக்கப்படவுள்ளது.13 நாட்கள் பயிற்சி நடைபெறும். பயிற்சி நேரம் 9:30AM முதல் 5:00PM வரை. மேலும் தகவலுக்கு 8825954443, 8056171986 *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!