News December 23, 2025
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (23.12.2025) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், பொதுமக்களிடமிருந்து 56 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி உடனடியாக தீர்வுகான உத்தரவிட்டார். உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர்கள் த.குமரேசன், அ.சுல்தானா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.
Similar News
News January 12, 2026
கோவையில் இப்பகுதியில் மின்தடை

கோவை மாவட்டத்தில் இன்று (ஜன.12) மின் பராமரிப்பு பணிகளால் பல்வேறு பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம், கே.என்.ஜி. பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE)
News January 12, 2026
மது பழக்கத்தால் நேர்ந்த சோகம்

உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன் (62). இவர் அளவுக்கு அதிகமாக மதுகுடித்துவிட்டு நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்துள்ளார். அவரது மகன், முனியப்பனை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த முனியப்பன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 11, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (11.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


