News December 23, 2025

மயிலாடுதுறை: ஒரே நாளில் குவிந்த 427 மனுக்கள்!

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கிராமங்களில் உள்ள மக்கள் வருகை தந்து ஆட்சியரிடம் மனுக்களை அளித்தனர். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 427 மனுக்கள் பெறப்பட்டன. இதையடுத்து மனுக்களை பெற்ற ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Similar News

News December 31, 2025

மயிலாடுதுறை: மக்களே.. நாளை இதை செய்ய தவறாதீங்க!

image

நாடு முழுவதும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அவ்வகையில் இவ்வருடம் முழுவதும் செல்வ செழிப்புடன் எந்த குறையுமின்றி வாழ, மகாலட்சுமியை வழிபடலாம் என்பது ஐதீகம். இதற்கு உங்கள் வீட்டில் உலோக ஆமை, துளசி செடி, சிரிக்கும் புத்தர் மற்றும் தேங்காய் வைத்து லட்சுமியை வழிபட்டால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம் என கூறப்படுகிறது. மேலும் அருகில் உள்ள லட்சுமி கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.

News December 31, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

2026 புத்தாண்டு கொண்டாடும் விதமாக இளைஞர்கள் சாலையில், பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் விபத்து ஏற்படுத்தும் வகையில், வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, சாலையில் சாகசம் செய்வது முதலியவை போக்குவரத்து விதிமீறல் குற்றங்களாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News December 31, 2025

மயிலாடுதுறை: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
2.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
அவசரக் காலங்களில் பயன்படும் இந்த பயனுள்ள தகவலை உதவும் மனம் கொண்ட நீங்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!