News December 23, 2025
கடலூர்: கடனை திருப்பி கேட்டவருக்கு கத்திக்குத்து

நரியன்குப்பத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ்(37). இவர் எலவத்தடியைச் சேர்ந்த ராமநாதன்(35) என்பவரிடம் ரூ.6000 கடன் பெற்றுள்ளார். இந்த நிலையில், கடனை ராமநாதன் திருப்பி கேட்டபோது, பணத்தைக் கொடுக்காமல் சத்யராஜ், ராமநாதனை கத்தியால் முதுகில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராமநாதன் பண்ருட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து தற்போது முத்தாண்டிகுப்பம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News January 16, 2026
கடலூர்: கஞ்சா விற்ற 3 பேர் கைது

ரெட்டிச்சாவடி எஸ்.ஐ எழிலரசி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கடை பைபாஸ் நிறுத்தம் அருகே சந்தேகம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது ரோஹித் (18), சக்திவேல் (18), மனோஜ் குமார் (23) ஆகியோர் கஞ்சா விற்க வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார், 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News January 16, 2026
கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.15) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.16) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 16, 2026
கடலூர்: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன.15) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.16) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


