News December 23, 2025
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் ஆன்லைனில் வாகனங்கள் வாங்கும் போது வாகனத்தை நேரில் பார்த்து வாகனத்திற்குரிய ஆவணங்களை முறையாக சரிபார்த்த பின்பு வாகனங்களை வாங்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு பணிகளில் மாவட்ட காவல்துறை ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 30, 2025
மயிலாடுதுறை: 10-வது போதும்; போஸ்ட் ஆபிஸில் வேலை!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பு பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<
News December 30, 2025
மயிலாடுதுறை: ரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு

மயிலாடுதுறை அடுத்த திருஇந்தளூரில் பிரசித்தி பெற்ற பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுள் இது 5-வது ஆலயமாகும். இதில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி ஒட்டி அதிகாலையில் திருஇந்தளுர் பரிமளரெங்கநாதர் ஆலய சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெருமாள் மங்களகிரி படிச்சட்டத்தில் எழுந்தருளினார்.
News December 30, 2025
மயிலாடுதுறை: ஒரே நாளில் குவிந்த 327 மனுக்கள்

மயிலாடுதுறை ஆட்சியரகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 327 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பெற்ற ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


