News December 23, 2025
தூத்துக்குடி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தூத்துக்குடி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News December 27, 2025
வக்கீல் தெரு பகுதியில் கஞ்சா விற்ற இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வக்கீல் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த மாதவன் மற்றும் புஷ்பராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
News December 27, 2025
வக்கீல் தெரு பகுதியில் கஞ்சா விற்ற இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வக்கீல் தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனை செய்த மாதவன் மற்றும் புஷ்பராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
News December 27, 2025
தூத்துக்குடி: இன்றைய இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


